நியூ சவுத் வேல்ஸில் நச்சுத்தன்மை வாய்ந்த இறப்புக் குப்பி காளான்கள் வளர்வது கண்டறியப்பட்டதால், காட்டுக் காளான்களை உட்கொள்ளுவதால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் குறித்து நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத் துறை (ϳԹ Health) மக்களை எச்சரிக்கிறது.
இறப்புக் குப்பி காளான்கள் என்று பொதுவாக அழைக்கப்படும் ‘அமனிடா ஃபல்லாய்டிஸ்’ (Amanita phalloides), சமீபத்தில் சிட்னி, தெற்கு மேட்டுநிலங்கள் (Southern Highlands) மற்றும் தெற்கு நியூ சவுத் வேல்ஸில் வளர்வது கண்டறியப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் நஞ்சுகள் தகவல் மையத்தின் (ϳԹ Poisons Information Centre) மூத்த துறைவல்லுநர் ‘ஜெனெவீவ் அடாமோ’ (Genevieve Adamo), இறப்புக் குப்பி காளான்களை உட்கொண்டால் உயிருக்கு ஆபத்தானது என்று கூறினார்.
"காளான் நச்சுத் தன்மையின் அறிகுறிகள் சில நேரங்களில் தாமதமாகலாம், ஆனால் ஆரம்பகாலச் சிகிச்சை சுகாதார விளைவுகளுக்கு இன்றியமையாதது," என்று திருமதி ‘அடாமோ’ (Adamo) கூறினார்.
"இவற்றில் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு, மற்றும் கடுமையான சந்தர்ப்பங்களில், கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு அல்லது உயிரிழப்பு ஆகியவை அடங்கும்."
சிட்னியின் தாவரவியல் பூங்காவின் தலைமை விஞ்ஞானி பேராசிரியர் ‘பிரெட் சம்மரெல்’ (Brett Summerell), காட்டுக் காளான் சாப்பிடுவது பாதுகாப்பானதா என்பதை அடையாளம் காண்பது மிகவும் கடினம் என்று எச்சரித்தார்.
"காட்டுக் காளான் உண்ணக்கூடியதா அல்லது நச்சுத்தன்மை கொண்டதா என்பதைக் கண்டறிய எளிதான அல்லது நம்பகமான வழி எதுவும் இல்லை, எனவே காட்டுக் காளான்களைத் தேடிச் சென்று சாப்பிடுவதைத் தவிர்க்குமாறு நாங்கள் மக்களுக்கு அறிவுறுத்துகிறோம்," என்று பேராசிரியர் ‘சம்மரெல்’ (Summerell) கூறினார்.
"நச்சுக் காளான்களைச் சமைப்பதனாலேயே அவற்றைச் சாப்பிடுவதற்குப் பாதுகாப்பானதாக மாற்றாது.
"நீங்கள் ஒரு நம்பிக்கையான மளிகைக் கடை, பல்பொருள் அங்காடி அல்லது உற்பத்திச் சந்தையில் இருந்து வாங்கும் காளான்களை மட்டுமே சாப்பிட வேண்டும்."
2024 ஆம் ஆண்டில், காளான்களை உட்கொண்டதால் ஏற்பட்ட நச்சு விளைவுகளுக்காக 23 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், அவற்றில் இரண்டு பேர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள்.
அதே ஆண்டில், நியூ சவுத் வேல்ஸ் மற்றும் ACT இல் காட்டுக் காளான்களின் பாதிப்புக்கு ஆளாகியிருப்பது தொடர்பான 363 அழைப்புகளுக்கு நியூ சவுத் வேல்ஸ் நஞ்சுகள் தகவல் மையம் பதிலளித்தது, இது 2023 ஆண்டுடன் ஒப்பிடும்போது 26 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு இதுவரை (31 மே 2025 வரை), 190 அழைப்புகள் வந்துள்ளன.
நியூ சவுத் வேல்ஸில் அதிக நச்சுத்தன்மை கொண்ட இறப்புக் குப்பி காளான்கள் அடையாளம் காணப்பட்டதன் மூலம், காட்டு காளான்களை உட்கொள்ளுவதால் பேரழிவு விளைவுகள் ஏற்படலாம் என்பதற்கு இது ஓர் எச்சரிக்கையாகும்.
“சிறு குழந்தைகள் தங்கள் வாயில் பொருட்களை வைக்கும் பழக்கம் இருப்பதால், அவர்களுக்கு அபாயம் ஏற்படக்கூடும்” என்று திருமதி ‘அடாமோ’ (Adamo) கூறினார்.
“உங்கள் குழந்தைகள் வெளியே விளையாடும்போது, குறிப்பாக பூங்காக்களில் உள்ள பெரிய மரங்களைச் சுற்றியோ அல்லது காளான்கள் வளரக்கூடிய வீட்டில் உங்கள் தோட்டத்தைச் சுற்றியோ இருக்கும்போது அவர்களைக் கண்காணியுங்கள்.
“உங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு வளரும் காளான்களை அகற்றவும்.”
தெற்கு நியூ சவுத் வேல்ஸில் ஆரம்பத்தில் கண்டறிந்ததைத் தொடர்ந்து, நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத் துறை மற்றும் உள்ளூர் நகர சபைகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக இறப்புக் குப்பி காளான்களுக்கான தொடர்ச்சியான கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றன.
காளான் நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று நீங்கள் கவலைப்பட்டால், அறிகுறிகள் தோன்றும் வரை காத்திருக்க வேண்டாம். உடனடியாக 13 11 26 என்ற எண்ணில் நியூ சவுத் வேல்ஸ் நஞ்சுகள் தகவல் மையத்தை (ϳԹ Poisons Information Centre) அழைக்கவும்.
அவசரகால சூழ்நிலையில் மூன்று பூஜ்யம் (000) என்ற எண்ணை அழைக்கவும் அல்லது அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லவும். முடிந்தவரை, அடையாளம் காண உதவும் வகையில் காளானின் மாதிரியோ அல்லது அதன் புகைப்படமோ எடுத்துக் கொண்டு செல்லவும்.
காளான் நச்சுத்தன்மை பற்றிய கூடுதல் தகவல்களைப் பின்வரும் இணையதளத்தில் காணலாம்: ϳԹ Health website